/உள்ளூர் செய்திகள்/சென்னை/நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள் திடீர் மறியல்: அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்புநேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள் திடீர் மறியல்: அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள் திடீர் மறியல்: அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள் திடீர் மறியல்: அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்கள் திடீர் மறியல்: அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
சென்னை : ரேடியாலஜிஸ்ட் பணித் தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், 50க்கும் மேற்பட்டோர், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக அலுவலகம் அருகே, நேற்று சாலை மறியல் செய்தனர்.
மற்றவர்கள், மருத்துவ கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களில் படித்ததாக கூறி, அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேர்முகத் தேர்வுக்கு வந்த, 50 பேர், அலுவலகம் எதிரே திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேர்முகத் தேர்வுக்கு வந்த ஒருவர் கூறியபோது, ''நேர்முக தேர்வில் பங்கேற்குமாறு கடிதம் வந்ததால் தான் நாங்கள் பணம் செலவழித்து சென்னைக்கு வந்தோம். இப்போது அனுமதியில்லை என சொல்வது சரியல்ல. எங்களையும் அனுமதிக்க வேண்டும்,'' என்றார். போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையை அரசுக்கு அனுப்புவதாக, மருத்துவப் பணிகள் கழக அதிகாரிகள் உறுதியளித்ததால், மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
'வேலை வாய்ப்பு அலுவலக பட்டியலை பின்பற்றினோம்' மருத்துவப் பணிகள் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தவறு யாருடையது? : தங்களது தேவை என்ன என்பதை, வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, மருத்துவப் பணிகள் அலுவலகம் அனுப்பியதா என்பது குறித்துத் தெளிவான விவரம் கிடைக்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால், வேலை வாய்ப்பு அலுவலகத்தினர், அதற்கேற்றபடி பட்டியல் அனுப்பி இருப்பர். மேலும், வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து வரும் பட்டியலை, அப்படியே தேர்வுக்கான விண்ணப்பங்களாகக் கருதி, தேர்வெழுத அழைப்பதால், இது போன்ற சிக்கல்கள் உருவாகின்றன. இது போன்ற தவறுகளை, அரசு அலுவலகங்கள் தவிர்க்க வேண்டும் என, வேலை வாய்ப்பில் சான்றிதழ்களைப் பதிந்துள்ளவர்கள் எதிர்பார்க்கின்றனர்.