தனியார் பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
தனியார் பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
தனியார் பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
ADDED : ஆக 30, 2011 09:41 PM
காஞ்சிபுரம் : தனியார் பஸ் மோதி, ஷேர் ஆட்டோ டிரைவர் இறந்தார்.
செய்யூர் அடுத்த வடபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன். இவரது மகன் சுதாகர், 20. இவர், தன் ஷேர் ஆட்டோவில், 29ம் தேதி காலை 8.30 மணிக்கு, கூவத்தூரிலிருந்து முகையூர் நோக்கிச் சென்றார். தென்னைபட்டினம் அருகே சென்ற போது, எதிரே வந்த தனியார் பஸ், நேருக்கு நேர் ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த சுதாகர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். கூவத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


