ADDED : ஆக 08, 2011 03:13 AM
நாமக்கல் : நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த டி.என்.பி.எஸ்.ஸி., குரூப் 4 சிறப்பு தேர்வில், 182 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான டி.என்.பி.எஸ்., குரூப் 4 சிறப்பு தேர்வு நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து, 206 பேர் விண்ணப்பித்திருந்தனர்.நேற்று நடந்த தேர்வில், 23 பேர் 'ஆப்சென்ட்' ஆனதால், 182 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை டி.ஆர்.ஓ., சீதாலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பார்வையற்றவர்களுக்காக, ஒருவர் நியமிக்கப்பட்டு, அவர்கள் சொல்லச் சொல்ல விடை குறிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


