Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/வேன் மோதிபைக்கில் சென்றவாலிபர் பலி

வேன் மோதிபைக்கில் சென்றவாலிபர் பலி

வேன் மோதிபைக்கில் சென்றவாலிபர் பலி

வேன் மோதிபைக்கில் சென்றவாலிபர் பலி

ADDED : ஆக 03, 2011 12:09 AM


Google News
மன்னார்குடி: கூத்தாநல்லூர் கடைவீதியில் பைக்கில் சென்ற வாலிபர் மீது லோடு வேன் மோதியதில் வாலிபர் இறந்தார்.கூத்தாநல்லூர் மேல்கொண்டான்வாடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மகாதேவன் (30).

இவர் சம்பவத்தன்று ஹீரோ ஹோண்டா பைக்கில் கடைத்தெருவுக்கு சென்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் மகாதேவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மகாதேவன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி மகாதேவன் இறந்தார். இதுகுறித்து கூத்தாநல்லூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us