Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/பொன்வித்யா மந்திர் பள்ளியில் யோகாசன போட்டி 250 பேர் பங்கேற்பு

பொன்வித்யா மந்திர் பள்ளியில் யோகாசன போட்டி 250 பேர் பங்கேற்பு

பொன்வித்யா மந்திர் பள்ளியில் யோகாசன போட்டி 250 பேர் பங்கேற்பு

பொன்வித்யா மந்திர் பள்ளியில் யோகாசன போட்டி 250 பேர் பங்கேற்பு

ADDED : ஜூலை 26, 2011 12:51 AM


Google News

கரூர்: கரூர் மண்மங்கலம் பொன்வித்யா மந்திர் பள்ளியில் நடந்த யோகாசனப் போட்டியில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கரூர் மண்மங்கலம் பொன்வித்யா மந்திர் பள்ளியில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் யோகாசனப்போட்டிகள் நடந்தது. போட்டியில் கரூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 12 பள்ளிகள் பங்கேற்றன. இதில் 250க்கு மேற்பட்ட மாணவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்றனர். மாலை மூன்று மணிக்கு பள்ளி தாளாளர் பெரியசாமி தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. வேலாயுதம்பாளையம் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் மேரிகரோலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். தொடர்ந்து வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொன்வித்யா மந்திர் குழந்தைகள் நிகழ்த்தி காட்டிய யோகாசனத்தை மையமாக கொண்டு கலைநிகழ்ச்சி நடந்தது. பள்ளி நிர்வாகிகள் சத்யநாராயணன், விசாகன், பள்ளி முதல்வர் சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us