ADDED : அக் 15, 2011 02:05 AM
கிள்ளை : கிள்ளை தைக்காலில் இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் அடுத்த கிள்ளை தைக்கால் தியாகராஜன், தட்சணாமூர்த்தி குடும்பத்தினருக்குமிடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்குமிடையே தகராறு நடந்தது.இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் தியாகராஜன், தட்சணாமூர்த்தி ஆகியோர் மீது கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


