Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/துறையூர் நகராட்சி வார்டுக்கு 23 தி.மு.க.,வினர் வேட்பு மனு தாக்கல்

துறையூர் நகராட்சி வார்டுக்கு 23 தி.மு.க.,வினர் வேட்பு மனு தாக்கல்

துறையூர் நகராட்சி வார்டுக்கு 23 தி.மு.க.,வினர் வேட்பு மனு தாக்கல்

துறையூர் நகராட்சி வார்டுக்கு 23 தி.மு.க.,வினர் வேட்பு மனு தாக்கல்

ADDED : அக் 02, 2011 12:04 AM


Google News

துறையூர்: துறையூர் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு 23 பேர் தி.மு.க.,வில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர்.

ஒரு வார்டில் போட்டியிட யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. துறையூர் நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., வேட்பாளர் முரளி, ஆணையர் மதிவாணனிடம் மனுதாக்கல் செய்தார். அப்போது பொதுக்குழு உறுப்பினர் குணசீலன், நகர செயலாளர் மகாராஜன் உடனிருந்தனர். நகராட்சியில் மொத்தமுள்ள 24 கவுன்சிலர் பதவிக்கு மூன்றாவது வார்டு தவிர பிற 23 வார்டுகளில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.



அதன் விபரம் வருமாறு: ஒன்றாவது வார்டு - ரெங்கநாதன், இரண்டாவது வார்டு: திலகம் மாரிமுத்து, நான்காவது வார்டு - விஜயசங்கர், ஐந்தாவது வார்டு - ரவி, ஆறாவது வார்டு - சுதாகர், ஏழாவது வார்டு - தனலட்சுமிபெருமாள், எட்டாவது வார்டு - ராணி சந்தானம், ஒன்பதாவது வார்டு - மனோகரன், 10வது வார்டு - தங்கமணி மகாராஜன், 11வது வார்டு - கிருத்திகாவேலு, 12வது வார்டு - பாஸ்கர், 13வது வார்டு - நல்லதம்பி, 14வது வார்டு - அமுதா தனபால், 15வது வார்டு - துரைராஜ், 16வது வார்டு - சீனிவாசன், 17வது வார்டு - செல்லதுரை, 18வது வார்டு - செல்வராணி மலர் மன்னன், 19வது வார்டு - சுதா செங்குட்டுவன், 20வது வார்டு - அமுதா முருகேசன், 21வது வார்டு - பாக்கியம், 22வது வார்டு - சுகுமார், 23வது வார்டு - வெங்கடாஜலம், 24வது வார்டு - சுதாகர்ணன் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். இதில், சிட்டிங் கவுன்சிலர்கள் வார்டு இரண்டு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது, 18, 20, 21ல் போட்டியிட எட்டு பேருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. வாய்ப்பு தரப்படாத சிட்டிங் கவுன்சிலர்கள் 11வது வார்டு கவுன்சிலர் செந்தாமரை காமராஜ், 14வது வார்டு கவுன்சிலர் கோப்பெருந்தேவி, 19வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரியும் மனுதாக்கல் செய்துள்ளனர். கட்சி சின்னம் பெற முயற்சித்து வருவதாக தகவல் பரவியுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us