ADDED : ஆக 15, 2011 10:19 AM

சத்தியம் செய்வது எளிதான விஷயம்.
ஆனால், அதைக் கடைபிடிப்பது கடுமையிலும் கடுமையானது. ஒருமுறை சத்தியம் செய்தபின், உயிருக்கு ஆபத்தானநிலை ஏற்பட்டாலும் அதை மீறக்கூடாது. குர்ஆன் இதுபற்றி கூறுவதாவது,
'உங்களுடைய சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர் முறிக்காதீர்கள். ஏனெனில், நீங்கள் இறைவனை உங்களுக்கு சாட்சியாக்கியுள்ளீர்கள். நீங்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் திண்ணமாக, இறைவன் நன்கு அறிகின்றான். சத்தியத்தை முறிப்பதன் மூலம் உங்கள் நிலை, தானே சிரமப்பட்டு நூலை நூற்று, பிறகு அதனைத் துண்டாக்கி விட்டாளே! அத்தகைய பெண்ணின் நிலை போன்று ஆகிவிடக்கூடாது. உங்களில் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை விட அதிக ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக, உங்கள் விவகாரங்களில் உங்கள் சத்தியங்களை ஏமாற்றும் ஆயுதமாக ஆக்கிக் கொள்கின்றீர்கள்''...
இந்த வசனத்தை மனதில் கொண்டு, சத்தியம் செய்யும் முன் ஆயிரம் முறை யோசியுங்கள்.


