Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/தேர்தலில் போட்டியிட இரு முறை ராஜினாமா :ரேஷன் கடை ஊழியர் மனு ஏற்பு

தேர்தலில் போட்டியிட இரு முறை ராஜினாமா :ரேஷன் கடை ஊழியர் மனு ஏற்பு

தேர்தலில் போட்டியிட இரு முறை ராஜினாமா :ரேஷன் கடை ஊழியர் மனு ஏற்பு

தேர்தலில் போட்டியிட இரு முறை ராஜினாமா :ரேஷன் கடை ஊழியர் மனு ஏற்பு

ADDED : அக் 02, 2011 12:58 AM


Google News

மதுரை : மதுரை மாநகராட்சி 65வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, ரேஷன் கடை ஊழியர் ஜெயக்குமார், இரண்டாவது முறையாக ராஜினாமா செய்து தேர்தல் களத்தில் குதித்தார்.

அவரது மனு ஏற்கப்பட்டது. இவர், தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி ரஹ்மத் கூட்டுறவு பண்டகசாலை விற்பனையாளர். 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் 43வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடுவதற்காக, விற்பனையாளர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்தித்து தோல்வியுற்றார்.பின், மீண்டும் அதே வேலையில் சேர்ந்தார். தற்போது அ.தி.மு.க., சார்பில் 65வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, விற்பனையாளர் பதவியை ராஜினாமா செய்தார். 'சுய சிந்தனை இல்லாமல் குடும்பத்தினர் வற்புறுத்தலின் பேரில் பதவியை ராஜினாமா செய்ததாக,' கூட்டுறவு தனி அலுவலருக்கு 2006 ல் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தை, தி.மு.க., வேட்பாளர் ரமேஷ்குமாரின் வக்கீல் மனோகரன் தேர்தல் அலுவலர் பாலமுருகனிடம் தாக்கல் செய்தார். 'சுய சிந்தனை இல்லாதவர்' என ஒப்புக்கொண்ட ஜெயக்குமாரின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என, வாதிட்டார். எனினும் மனு ஏற்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us