/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/30 ஜாதிகளை பி.சி., பட்டியலில் சேர்க்க கூட்டம் சென்னையில் செப்., 5, 6ல் ஆலோசனை30 ஜாதிகளை பி.சி., பட்டியலில் சேர்க்க கூட்டம் சென்னையில் செப்., 5, 6ல் ஆலோசனை
30 ஜாதிகளை பி.சி., பட்டியலில் சேர்க்க கூட்டம் சென்னையில் செப்., 5, 6ல் ஆலோசனை
30 ஜாதிகளை பி.சி., பட்டியலில் சேர்க்க கூட்டம் சென்னையில் செப்., 5, 6ல் ஆலோசனை
30 ஜாதிகளை பி.சி., பட்டியலில் சேர்க்க கூட்டம் சென்னையில் செப்., 5, 6ல் ஆலோசனை
ஈரோடு : மாநிலங்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 30 ஜாதிகளை சேர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சார்பில், வரும் 5, 6ம் தேதி சென்னையில் நடக்கிறது.
ஆணையத் தலைவர் ராவ், உறுப்பினர்கள் கார்வேந்தன், ஷகில் உஸ் ஜமான் அன்சாரி ஆகியோர் அடங்கிய ஆணையம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஜாதிகள், வகுப்புகள், உட்பிரிவுகள், ஒத்த பிரிவுகளை மாநிலத்துக்கான மத்திய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க, 'சென்னை, 735-அண்ணாசாலை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ)' அலுவலகத்தில், வரும் 5, 6ம் தேதி பொது விசாரணை நடத்த உள்ளது.
வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கு, பாண்டிய வெள்ளாளர், சேரகுல வெள்ளாளர், வல்லநாட்டு செட்டியார், லத்தீன் கத்தோலிக்க கிறிஸ்தவ வண்ணார் (கன்னியாகுமரி மாவட்டத்தில்), தொரையர் (சமவெளி), சத்திரியநாயுடு, எர்ர கொல்லர் (தொட்டிய நாயக்கர் வகுப்பின் உட்பிரிவாக), ரெட்டி (கஞ்சம்), கணியாள வெள்ளாளர், ஓ.பி.எஸ்., வெள்ளாளர், பையூர் கோட்ட வெள்ளாளர், மூன்று மண்டை 84 ஊர் சோழிய வெள்ளாளர், குடிகார வெள்ளாளர், ஊற்று வளநாட்டு வெள்ளாளர், ஷேக் ஆகிய பிரிவினருக்கு நடக்கிறது.
வரும் 6ம் தேதி காலை 10 மணிக்கு, சையத், அன்சார், காசுக்கார செட்டியார், கற்பூர செட்டியார், அகரம் வெள்ளான் செட்டியார், சுந்தரம் செட்டி, உரிக்கார நாயக்கர், உக்கிரகுல சத்திரிய நாயக்கர், ஆயிர வைசியர், கொங்கு வைஷ்ணவா, சௌத்திரி, கன்னடிய நாயுடு, லிங்காயத், சேர்வை, ஆரிய வைஸ்யா ஆகிய பிரிவினருக்கு நடக்கிறது.