Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/நபார்டு நிதி உதவி திட்டம் ரோடு வசதிக்கு ரூ.4.4 கோடி

நபார்டு நிதி உதவி திட்டம் ரோடு வசதிக்கு ரூ.4.4 கோடி

நபார்டு நிதி உதவி திட்டம் ரோடு வசதிக்கு ரூ.4.4 கோடி

நபார்டு நிதி உதவி திட்டம் ரோடு வசதிக்கு ரூ.4.4 கோடி

ADDED : ஜூலை 29, 2011 11:15 PM


Google News

தேனி : நபார்டு நிதி உதவி திட்டத்தில் ரோடு வசதிகளை மேம்படுத்துவதற்காக தேனி மாவட்டத்திற்கு 4 கோடியே 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நபார்டு சாலை கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரோடு திட்டங்களுக்காக நடப்பு நிதியாண்டிற்கு, 4 கோடியே 3 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

31 கி.மீ., தூரம் தார்ரோடு வசதி செய்யப்படுகிறது. கன்னியப்பபிள்ளை பட்டி- வரதராஜபுரம் ரோடு 31.45 லட்சம் ரூபாயில் தார்சாலை அமைக்கப்படுகிறது.



பெரியகுளம் குமுளி ரோடு- கரைப்பட்டி ரோடு 44.85 லட்சத்திலும், வடபுதுப்பட்டி- கலெக்டர் அலுவலக ரோடு 31.60 லட்சத்திலும், கம்பம்-சுருளிப்பட்டி ரோடு 88.10 லட்சத்திலும், சுருளிப்பட்டி- கல்லிறைச்சல் ரோடு 46.26 லட்சத்திலும், கூடலூர்-பளியன்குடி ரோடு 81.33 லட்சம் ரூபாயிலும் தார் ரோடாக மாற்றப்படுகிறது.



* செங்குளம்-ஆலந்தளிர் ரோடு 5.7 கி.மீ., தூரத்திற்கு 97 லட்சத்து 20 ஆயிரத்திலும், சித்தார்பட்டி-ஜி.உசிலம்பட்டி ரோடு 33.19 லட்சம் ரூபாயிலும் ரோடு பணி நடக்க உள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பில், பணிகள் விரைவில் துவங்க உள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us