/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஆத்தூர் பஞ்.,தேர்தலில் கடும் போட்டி : முக்கிய பிரமுகர்கள் சுயேட்சைகளாக களம் இறங்குவதால் பரபரப்புஆத்தூர் பஞ்.,தேர்தலில் கடும் போட்டி : முக்கிய பிரமுகர்கள் சுயேட்சைகளாக களம் இறங்குவதால் பரபரப்பு
ஆத்தூர் பஞ்.,தேர்தலில் கடும் போட்டி : முக்கிய பிரமுகர்கள் சுயேட்சைகளாக களம் இறங்குவதால் பரபரப்பு
ஆத்தூர் பஞ்.,தேர்தலில் கடும் போட்டி : முக்கிய பிரமுகர்கள் சுயேட்சைகளாக களம் இறங்குவதால் பரபரப்பு
ஆத்தூர் பஞ்.,தேர்தலில் கடும் போட்டி : முக்கிய பிரமுகர்கள் சுயேட்சைகளாக களம் இறங்குவதால் பரபரப்பு
ஆத்தூர் : ஆத்தூர் பஞ்.,தேர்தலில் பல்வேறு கட்சியினரும், பிரபலமான சுயேட்சைகளும் களம் இறங்கியிருப்பதால் இங்கு கடும் போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தலைவருக்கான களத்தில் அதிமுக.,சார்பில் ஒன்றிய பாசறை செயலாளர் அறிவுடைநம்பி பாண்டியன் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் திமுக., காங்., தேமுதிக., உட்பட்ட கட்சிகளும் தங்கள் பங்குக்கு வேட்பாளர்களை தயார் செய்து வரும் நிலையில் பாஜக., கம்யூனிஸ்ட் கட்சியினரும் களம் புக ஆயத்தமாகி வருவதாகத் தெரிவதால் ஆத்தூரில் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. அரசியல் கட்சிகளோடு மக்கள் மத்தியில் பிரபலமான சுயேட்சைகளும் மல்லுக்கட்ட முடிவெடுத்திருப்பதால் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே ஒவ்வொரு வார்டிலும் துவங்கி விட்டது. நேற்று முன்தினம் மதியம் வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையிலேயே விறுவிறுப்பாகி உள்ள ஆத்தூர் பஞ்.,தேர்தல் களம் வேட்புமனு தாக்கலுக்குப்பிறகு மேலும் சுறுசுறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது எனத்தெரிகிறது.