ADDED : ஆக 22, 2011 12:06 AM
தேவகோட்டை : தேவகோட்டை அருகே வீரையை சேர்ந்த ராமசாமி மனைவி வள்ளி,65.
கடந்த
18ம் தேதி காலை இவரது வீட்டில் மின்பழுது ஏற்பட்டது. இதை சரி செய்ய,
வேப்பங்குளத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் பில்லப்பனை, 38. அழைத்து வந்தார்.
இவரை வேலைபார்க்க செய்துவிட்டு, பால் வாங்க சென்றார். அந்த சமயத்தில்,
பெண்ணின் கைபையில் இருந்த 6 பவுன் நகையை திருடிச்சென்றார். அவர் பையில்
தேடியபோது, நகை திருடப்பட்டதை அறிந்தார்.இன்ஸ்பெக்டர் முத்துராஜா,
கருப்பையா எஸ்.ஐ., ஆகியோர் விசாரித்து வந்தனர். நகையை விற்கச்சென்றபோது,
பில்லப்பனை கைது செய்தனர்


