ADDED : ஆக 01, 2011 01:30 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா நடந்தது.
தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை திருவிழா நேற்று முன் தினம் இரவு நடந்தது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.இரவு தீச்சட்டி ஊர்வலம், ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தேவபாண்டலம் பர்வதராஜ குலத்தினர் செய்திருந்தனர்.