ADDED : செப் 19, 2011 12:58 AM
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டியில் புவி வெப்பமயமாதலைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தலைமை வகித்தார். ஊர்வலத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி மாணவிகள் சென்றனர். ஊர்வலம் இறுதியில் பள்ளியை அடைந்தது. மாணவிகளுக்கு வெப்பமயமாதலை தடுப்பது குறித்து பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவியல் ஆசிரியர்கள் தவமணி, முத்துமணி, பட்டதாரி ஆசிரியர்கள் சுப்பிரமணியன், செல்லம்மாள் கலந்து கொண்டனர்.