ADDED : செப் 10, 2011 01:50 AM
குன்னூர் :பாய்ஸ்கம்பெனி ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டுத் திருவிழாவில்,
அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தேவ அன்னை பவனி வந்தார்.
அருவங்காடு
பாய்ஸ்கம்பெனி தூய ஆரோக்கிய அன்னை திருத்தல 28வது ஆண்டு விழா மற்றும்
குடும்ப பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆரோக்கிய
மாதாவின் பிறந்த நாளான நேற்று முன்தினம் காலை 10.00 மணிக்கு ஊட்டி
மறைமாவட்ட பிஷப். அமல்ராஜ் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி
நடத்தப்பட்டது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மாதாவை வழிபட்டு
வேண்டுதல்களை நிறைவேற்றினர். மதியம் 12.00 மணிக்கு, தேவாலய வளாகத்தில்
நடத்தப்பட்ட அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 5.00
மணிக்கு ஊட்டி பிஷப் இல்ல குரு. ஞானதாஸ் தலைமையில் திருப்பலி
நடத்தப்பட்டது. இரவு 7.00 மணிக்கு அலங்கார சப்பரத்தில் தேவ அன்னை பவனி
சென்றார். பாய்ஸ்கம்பெனி, கேட்டில்பவுண்டு, அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை
குடியிருப்பு, அருவங்காடு மெயின் கேட், கோபாலபுரம் வழியாக திருத்தலம்
வந்தது. பவனியில் வந்தவர்கள் மெழுகு திரிகளை ஏந்தி, சப்பரத்தின் மீது
உப்பு வீசி பக்தி பாடல்களை பாடினர். இரவு 9.00 மணிக்கு நற்கருணை ஆசிருடன்
விழா நிறைவு பெற்றது. பாய்ஸ்கம்பெனி ஆட்டோ டிரைவர்கள் சங்கம்,கோபாலபுரம்
இளைஞர்கள் சார்பில் அலங்கார மேடை அமைக்கப்பட்டு, மாதா சிலைகள்
வைக்கப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை, பங்கு குருக்கள் இம்மானுவேல்,
சில்வஸ்டர் விஜயன் உட்பட பங்கு மக்கள் செய்திருந்தனர்.