ADDED : ஆக 29, 2011 10:09 PM
திட்டக்குடி : பொதுப்பணித் துறை சார்பில் ராமநத்தம் பயணியர் விடுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
உதவி செயற்பொறியாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.
விழாவில் உதவி பொறியாளர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், ரமேஷ்கீர்த்தி வாசன், நீர் பாசன ஆய்வாளர் கலியமூர்த்தி, பாசன உதவியாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.