ADDED : ஜூலை 27, 2011 11:28 PM
திண்டிவனம் : திண்டிவனம் நண்பர்கள் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.நாகராஜன் தலைமை தாங்கினார்.
ஓவியர் தேவ் வரவேற்றார். ராஜன், செல்வ காந்தி முன்னிலை வகித்தனர். புதிய தலைவராக வெங்கடேசன், செயலாளராக கோபாலகிருஷ்ணன், பொருளாளராக விஜயகுமார் பதவியேற்றனர். புதிய நிர்வாகிகளை அரிமா சங்க நிர்வாகி டாக்டர் நரசிம்மன் அறிமுகம் செய்தார். விழா மலரை வெளியிட்டு வக்கீல் சங்கரன் பேசினார். அசோக் குமார் சோர்டியா, அகர்சந்த், சின்னசாமி, ரமேஷ் பால், பால் பாண்டியன் உட்பட பலர் பேசினர். ஆனந்த் நன்றி கூறினார்.


