/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/"தாய்' திட்டத்தால்குக்கிராமங்களுக்கு பயன்"தாய்' திட்டத்தால்குக்கிராமங்களுக்கு பயன்
"தாய்' திட்டத்தால்குக்கிராமங்களுக்கு பயன்
"தாய்' திட்டத்தால்குக்கிராமங்களுக்கு பயன்
"தாய்' திட்டத்தால்குக்கிராமங்களுக்கு பயன்
ADDED : ஆக 30, 2011 01:37 AM
விருதுநகர்: ஊரக வளர்ச்சிக்காக செயல்படுத்த உள்ள 'தாய்' திட்டத்தின் மூலம், குக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தின் மூலம், கடந்த ஆட்சியில் கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது. தற்போதைய அரசு, 'தாய்' திட்டத்தை , மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளின் அடிப்படையில் செயல்படுத்த உள்ளது. குக்கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு செல்லும் ரோடுகளை இணைக்கும் ரோடு, குடி நீர் , தெரு விளக்குகள், சுகாதார வசதிகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவுள்ளன. ஊராட்சிகள், பேரூராட்சிகள் என செயல்படுத்தாமல், கிராமங்களை தேர்வு செய்து 'தாய்' திட்டம் செயல்படுத்த உள்ளதால், அனைத்து தரப்பினருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கும் வகையில், இத்திட்டம் அரசால் செயல்படுத்த உள்ளது.


