ADDED : ஜூலை 27, 2011 11:12 PM
கடலூர் : பண்ருட்டியில் ஒன்றிய குழு சாதாரணக் கூட்டம் நடந்தது.சேர்மன் எழிலரசி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பி.டி.ஓ., துரை, கவுன்சிலர்கள் எழிலரசன், கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். பண்ருட்டி நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நெய்வேலி தொகுதிக்குட்பட்ட காடாம்புலியூர் சமத்துவபுரம் அருகே அமைப்பது என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.