/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மாற்றுத்திறனாளி தடுப்பு சிறப்பு பயிற்சி முகாம்மாற்றுத்திறனாளி தடுப்பு சிறப்பு பயிற்சி முகாம்
மாற்றுத்திறனாளி தடுப்பு சிறப்பு பயிற்சி முகாம்
மாற்றுத்திறனாளி தடுப்பு சிறப்பு பயிற்சி முகாம்
மாற்றுத்திறனாளி தடுப்பு சிறப்பு பயிற்சி முகாம்
ADDED : செப் 01, 2011 11:30 PM
தொட்டியம்: தொட்டியம் யூனியன் காட்டுப்புத்தூரில் உள்ள ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளியாக வருவதை தடுப்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு மேற்பார்வையாளர் குணசேகரன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பிரபாகரன் முன்னிலை வகித்தார். முகாமில், டாக்டர் சிந்தியா பங்கேற்று ஆண்கள், பெண்களுக்கு மாற்று திறனாளியாக வருவதை தடுப்பது விளக்கவுரை ஆற்றினார். முகாமில், பிஷப் ஹோம் மேற்பார்வையாளர் குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், காட்டுப்புத்தூர், அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். மேற்பார்வையாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.


