ADDED : ஆக 19, 2011 03:52 AM
விழுப்புரம்: நேசக்கரம் தொண்டு நிறுவனம் சார்பில் ராதாபுரம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சுதந்திர தின விழாவையொட்டி ராதாபுரம் அரசு துவக்க, உயர்நிலைப் பள்ளிகளில்
பயிலும் 493 மாணவர்களுக்கு நேசக் கரம் தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி
உபகரணங்கள் வழங்கப்பட்டன.தலைமை ஆசிரியர் நாக ராஜ் வரவேற்றார். துணை தலைமை
ஆசிரியர் அல்லி முன்னிலை வகித்தார். நிறுவன தலைவர் தனசேகரன், செயலாளர்
கருணாநிதி, பொருளாளர் பழனி, நிர்வாகிகள் கருணா மூர்த்தி, சத்தியராஜ்,
ரவிக்குமார், அரிதாஸ், ஊராட்சி எழுத்தர் சண்முகம், உறுப்பினர்
சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர்.


