ADDED : ஜூலை 27, 2011 12:08 AM
விழுப்புரம் : ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) சார்பில் விழுப்புரத்தில் குருபூஜை விழா நடந்தது.
விழுப்புரத்தில் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில் குரு பூஜை நடந்தது.
விழுப்புரம் நேஷனல் ஏஜென்சிஸ் உரிமையாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை தென் பாரத அமைப்பாளர் ரங்கராஜன் சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிரசார செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.