Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/வழிப்பறி திருடர்கள் ஏழு பேர் அதிரடி கைது

வழிப்பறி திருடர்கள் ஏழு பேர் அதிரடி கைது

வழிப்பறி திருடர்கள் ஏழு பேர் அதிரடி கைது

வழிப்பறி திருடர்கள் ஏழு பேர் அதிரடி கைது

ADDED : ஜூலை 30, 2011 01:01 AM


Google News

சேலம்: தனியார் நிறுவன சூப்பர்வைஸரை தாக்கி, பணத்தை வழிப்பறி செய்த ஏழு பேரை, தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

சேலம், கொண்டலாம்பட்டி ஜெய்ஹிந்த் இரும்பு மில்லில் சூப்பர் வைஸராக பணிபுரிந்து வருபவர் முருகேசன். இவர், கடந்த 18ம் தேதி இரவு 8.45 மணிக்கு பணியை முடித்து விட்டு, பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சிலர் அவரை வழிமறித்து, கத்தியால் குத்தி காயப்படுத்தி, அவர் வைத்திருந்த, மூன்று லட்சம் ரூபாயை பறித்துச் சென்றனர்.



சேலம் மாநகர கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் ரவீந்திரன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுப்ரமணியன் தலைமையில், செவ்வாய்ப்பேட்டை போலீஸாரை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.



நேற்று அதிகாலை 4.15 மணிக்கு குகை மாரியம்மன் கோவில் அருகே ரங்கி தெருவில், ஒரு பல்சர் பைக்கில் வந்த திருச்செங்கோடு லிங்கேஸ்வரன் (36), ஓமலூர் விஜயகுமார் (23), திருச்செங்கோடு சிலோன்காலனியை சேர்ந்த வசந்தராஜ் (24) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் காந்தி ஸ்டேடியம் மேம்பாலம் அருகில், பணத்தை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அழகாபுரம் ராஜ்குமார் (23), தோப்புக்காடு வினோத்குமார் (24), சின்ன மாவீரன் (23), மணியனூர் ராஜா (43) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, ஐந்து லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us