ADDED : ஆக 03, 2011 10:04 PM
கடலூர் : மனைவி, மகனிடம் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்த முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.நெய்வேலி அடுத்த வடக்குத்தைச் சேர்ந்தவர் செல்வராசு 55;, இவரது மனைவி, மகனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 26ம் தேதி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில் உடல் கருகிய அவர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.