
அரசு செலவில்...!காஞ்சிபுரத்தை அடுத்த வாரணவாசி ஊராட்சியில், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடந்தது.விழாவில், மதுராந்தகம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கணிதா சம்பத் பேசும்போது, 'அரசின் உதவிகளைப் பெறும் நீங்கள், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்கவேண்டும்' என்றார்.
அதுபோல், காஞ்சிபுரத்தில், சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது.
இதைக் கண்ட பார்வையாளர் ஒருவர், 'அரசு விழா (செல)விலேயே தேர்தல் பிரசாரத்தை துவக்கிட்டாங்களே... பலே... கில்லாடி தான் போங்க...' எனக் கூறி சிரித்தார்.
இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'பட்டா, சிட்டா என்று ஆவணங்கள் வாங்க இவரும் நடையாய் நடந்து, அதிகாரிகளை சரிக்கட்டி வாங்கியிருப்பார் போலும். கரெக்டா சொல்றாரே... அனுபவம் பேசுது...' என, 'கமென்ட்' அடித்ததும், அருகில் இருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.