/உள்ளூர் செய்திகள்/சென்னை/அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் ஒரு கோடி ரூபாயில் நலப்பணிகள்அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் ஒரு கோடி ரூபாயில் நலப்பணிகள்
அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் ஒரு கோடி ரூபாயில் நலப்பணிகள்
அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் ஒரு கோடி ரூபாயில் நலப்பணிகள்
அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் ஒரு கோடி ரூபாயில் நலப்பணிகள்
மாமல்லபுரம் : சென்னை அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள கிராமங்களில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்டப் பணிகள் துவக்கப்படுவதாக, அணுமின் நிலைய இயக்குனர் ராமமூர்த்தி கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையத்தை இயக்கி வரும் இந்திய அணுமின் கழகம், அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள கிராமங்களில், பல்வேறு நலத் திட்டப்பணிகள் செய்து வருகிறது.
சென்னை அணுமின் நிலையம், இரு யூனிட் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நாள்தோறும், 75 லட்சம் யூனிட் மின்சாரம், மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது. நிலக்கரி, நீர், காற்று ஆகியவை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விட, அணுசக்தி மின்சாரத்தின் விலை மிகவும் குறைவானது. இதில், சுற்றுப்புற மாசு ஏற்படாது. இயற்கையாக உள்ள கதிரியக்க அளவை விட (240 மில்லி ரெம்), குறைவாகவே கல்பாக்கத்தில் உள்ளது. அணுமின் நிலையத்தால் சுற்றுப் புறத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அணுமின் நிலையம் ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் உள்ளது. நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால் பாதிக்கப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அணுசக்தி, ஆக்கப்பூர்வமான சக்தி என்பதை மக்கள் உணரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


