/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பாலூரில் ரூ.17 கோடி மதிப்பில் ரயில்நீர் தொழிற்கூடம் துவக்கம்பாலூரில் ரூ.17 கோடி மதிப்பில் ரயில்நீர் தொழிற்கூடம் துவக்கம்
பாலூரில் ரூ.17 கோடி மதிப்பில் ரயில்நீர் தொழிற்கூடம் துவக்கம்
பாலூரில் ரூ.17 கோடி மதிப்பில் ரயில்நீர் தொழிற்கூடம் துவக்கம்
பாலூரில் ரூ.17 கோடி மதிப்பில் ரயில்நீர் தொழிற்கூடம் துவக்கம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே, 17 கோடி ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்டுள்ள ரயில்நீர் தொழிற்கூடத்தை, காஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதன் நேற்று துவக்கி வைத்தார்.
கட்டுமானம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தும் பணி, இரண்டரை ஆண்டுகளாக நடந்தது. தற்போது, 3.5 ஏக்கர் பரப்பளவு வளாகத்தில், 3,500 ச.மீ., பரப்பளவு தொழிற்கூடம், 17 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை, நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்டது. பாலாற்று நீரை நவீன முறையில் சுத்திகரித்து, ஒரு லிட்டர் கொள்ளளவு பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பி, பயணிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே நிர்வாக எல்லைக்குட்பட்ட தமிழகம், கேரளம், தெற்கு ஆந்திரம், கிழக்கு கர்நாடகம் ஆகிய இடங்களில் இயங்குகின்ற தொலைதூர ரயில்கள், ரயில் நிலைய கடைகள் ஆகியவற்றில், இந்த குடிநீர் விநியோகிக்கப்படும். புதிய தொழிற்கூட இயக்க சோதனை, கடந்த மாதம் துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது. தொழிற்கூட துவக்க விழாகாஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதன் தலைமையில் நேற்று நடந்தது.
அவர் துவக்கிவைத்து பேசியதாவது: பாலூரில் தடுப்பணை கட்ட, மத்திய நீர்வள ஆதாரத்துறையிடம் ஆலோசித்தபோது, மாநில அரசு அறிக்கை அளித்தால் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.இங்கு, 19 கோடி ரூபாய்