/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/போலி டாக்டர்களைப் பிடிக்க போலீசார்...வேட்டை : ஒரே நாளில் எட்டு பேர் கைதுபோலி டாக்டர்களைப் பிடிக்க போலீசார்...வேட்டை : ஒரே நாளில் எட்டு பேர் கைது
போலி டாக்டர்களைப் பிடிக்க போலீசார்...வேட்டை : ஒரே நாளில் எட்டு பேர் கைது
போலி டாக்டர்களைப் பிடிக்க போலீசார்...வேட்டை : ஒரே நாளில் எட்டு பேர் கைது
போலி டாக்டர்களைப் பிடிக்க போலீசார்...வேட்டை : ஒரே நாளில் எட்டு பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ஒரே நாளில், எட்டு போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தகவலறிந்து கிராமங்களில் கிளினிக் வைத்து நடத்தி வந்த, மற்ற போலி டாக்டர்கள் பலர் தங்களது கிளினிக்குகளை மூடிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். வேட்டை தொடரும்: இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி., வனிதா கூறும் போது, ''தகுந்த மருத்துவ படிப்பு இன்றி, கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருபவர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த போலி டாக்டர்கள் வேட்டை, மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்,'' என்றார். கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும், 30 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அதற்கான அபராதத்தை செலுத்திவிட்டு, மீண்டும் கிராமங்களை குறிவைத்து கிளினிக்குகளை திறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.