ADDED : செப் 14, 2011 12:13 AM
பரங்கிப்பேட்டை:புதுச்சத்திரம் அருகே வாகனம் மோதிய விபத்தில் அடையாளம்
தெரியாத முதியவர் இறந்தார்.புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு அருகே
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்தார்.
அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. கோடு போட்ட கால்கட்டை
மட்டும் அணிந்துள்ளார்.பெரியப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மணி கொடுத்த
புகாரின் பேரில் புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் நாகூரான் வழக்குப்பதிந்து
விசாரித்து வருகிறார்.