Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/அமெரிக்காவில் ஏழைகள் அதிகரிப்பு

அமெரிக்காவில் ஏழைகள் அதிகரிப்பு

அமெரிக்காவில் ஏழைகள் அதிகரிப்பு

அமெரிக்காவில் ஏழைகள் அதிகரிப்பு

UPDATED : செப் 14, 2011 05:16 PMADDED : செப் 14, 2011 05:04 PM


Google News
நியூயார்க்: அமெரி்க்காவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீ்ழ் வசித்து வருவதாக அந்நாட்டு மக்கள் தொகை ஆய்வு மையம் வெளியிட்டு்ள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2009-ம் ஆண்டு 43.6மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு (2010-ம் ஆண்டு) 46.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது 14.3 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம் வாங்கும் சக்தி அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்காவில் ஆண்டு வருமானம் 11,139 டாலர் ரூ. 5லட்சம் உள்ளவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் எனவும், ஆண்டு வருமானம் 22,314 டாலர்( ரூ. 10 லட்சம்) மேல் என அமெரிக்கர்களின் ஆண்டு வருமானம் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் செல்லும் நிலைமை 6.4 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சுகாதாரம், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் இன்றி கடந்த ஆண்டு (2009) 49. மில்லியன் மக்களும், 2010-ம் ஆண்டு 49.09 மில்லியன் மக்களும் உள்ளனர். இது 16.03 சதவீதம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us