ADDED : செப் 10, 2011 01:47 AM
கோத்தகிரி : நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கராத்தே போட்டி கோத்தகிரியில் நடந்தது.
இதில், 14 பள்ளிகளில் இருந்து 350 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், கோத்தகிரி நாவா பள்ளி மாணவ, மாணவியர் 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் பெற்று சாதித்தனர். ஜூனியர் அளவில் கட்டா பிரிவில் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் சண்முகம், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தார்.