ADDED : செப் 22, 2011 02:12 AM
ஈரோடு: ஈரோடு கணபதிபாளையம் நால்ரோட்டை சேர்ந்தவர் விஸ்வநாதன்(25).
இவர்,
நேற்று காலை 10.30 மணிக்கு, தன், 'மாருதி ஆம்னி' வேனில் கரூர் சாலை
சோளங்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ்
மோதியதில், விஸ்வநாதன் பலத்த காயமடைந்தார். சிகிச்சை பலனின்றி ஈரோடு அரசு
மருத்துவமனையில் இறந்தார்.மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் கண்ணன்
விசாரிக்கிறார்.