ADDED : செப் 27, 2011 12:26 AM
சத்தியமங்கலம்: பண்ணாரி வனப்பகுதியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பண்ணாரி வனப்பகுதியில் குரங்குபள்ளம் அருகில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்குபோட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. சத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் விசாரிக்கிறார். இறந்த வாலிபருக்கு 40 வயது இருக்கும் கருப்பு கலரில் பேன்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்திருந்தார்.