Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/எஸ்.எம்.எஸ்., மோசடி ஏமாளி வாலிபர் புகார்

எஸ்.எம்.எஸ்., மோசடி ஏமாளி வாலிபர் புகார்

எஸ்.எம்.எஸ்., மோசடி ஏமாளி வாலிபர் புகார்

எஸ்.எம்.எஸ்., மோசடி ஏமாளி வாலிபர் புகார்

ADDED : செப் 13, 2011 09:57 PM


Google News
திண்டுக்கல் : நான்கரை கோடி ரூபாய் பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி, பண மோசடி செய்தவர்கள் மீது, திண்டுக்கல்லில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

வேடசந்தூர் சுல்தான் அலி தெருவை சேர்ந்தவர் நடராஜன், 29. இவர் சந்திரசேகரன் எஸ்.பி.,யிடம் அளித்துள்ள புகார்:எனது மொபைல் போனுக்கு, கடந்த 2010 ல், எஸ்.எம்.எஸ்., வந்தது. அமெரிக்காவில் கோகோ கோலா நிறுவன ஆண்டு விழாவை முன்னிட்டு, எனக்கு 10 லட்சம் டாலர் பரிசு கிøத்துள்ளதாகவும், இ மெயிலில் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது. இமெயிலில் தொடர்பு கொண்டேன். அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் ஆண்டர்சன், பரிசு தொகையை எடுத்து கொண்டு டில்லி வந்துள்ளதாக தெரிவித்தனர். தொடர்பு கொண்ட ஆண்டர்சன், 'வரிகள் செலுத்த வேண்டும். வங்கி கணக்கில் பணம் போடுங்கள்,' என்றார்.இதன்படி 3.22 லட்சம் செலுத்தினேன். பின்பு, அவருடைய போன் 'சுவிட் ஆப்' செய்யப்பட்டது. பணத்தை மீட்டுத்தர வேண்டும் என, கூறியிருந்தார்.மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us