/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது கலெக்டர் அமுதவல்லி "அட்வைஸ்'மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது கலெக்டர் அமுதவல்லி "அட்வைஸ்'
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது கலெக்டர் அமுதவல்லி "அட்வைஸ்'
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது கலெக்டர் அமுதவல்லி "அட்வைஸ்'
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது கலெக்டர் அமுதவல்லி "அட்வைஸ்'
ADDED : ஆக 17, 2011 03:52 AM
விருத்தாசலம் : 'மாணவர்கள் சாலை மறியல், போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் எதிர்காலம் பாதிக்கும்' என விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் நல விடுதியில் கலெக்டர் அமுதவல்லி திடீர் ஆ#வு மேற்கொண்டு விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தவர், சமைப்பதற்கு தரமான அரிசி பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
பின்னர் மாணவர்களிடம், 'குறைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குறைகள் இருந்தால் கல்லூரி முதல்வர், வருவாய்துறை அதிகாரிகளிடம் கூறி குறைகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து சாலை மறியல், போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. காவல் துறை நடவடிக்கை எடுத்தால் மாணவர்களாகிய உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்' என அறிவுரை வழங்கினார்.
ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார், தாசில்தார் சரவணன், டி.எஸ்.பி., அறிவழகன், கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வி, இன்ஸ்பெக்டர் சீராளன் உட்பட பலர் உடனிருந்தனர்.


