கூடலூரில் காத்திருக்கும் சுயேட்சைகள்
கூடலூரில் காத்திருக்கும் சுயேட்சைகள்
கூடலூரில் காத்திருக்கும் சுயேட்சைகள்
ADDED : அக் 03, 2011 11:01 PM
கூடலூர் : கூடலூர் நகராட்சி தலைவருக்கு, முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சுயேச்சையாக போட்டியிடும் சிலர், எதிர்பார்ப்பில் மனுத்தாக்கல் செய்தது தெரியவந்துள்ளது. ஓட்டு பிரியக்கூடும் என்பதால், சில பெரிய கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவரை வாபஸ் செய்வதற்காக பேச்சு நடத்துவது வாடிக்கை. இதனை உண்மையாக்கும் விதத்தில் சிலர், கூடலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், இதுவரை யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லையே என்ற ஏக்கத்தில் உள்ளனர்.


