Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மணம்பூண்டி மக்களுடன் எம்.எல்.ஏ., கலந்தாய்வு

மணம்பூண்டி மக்களுடன் எம்.எல்.ஏ., கலந்தாய்வு

மணம்பூண்டி மக்களுடன் எம்.எல்.ஏ., கலந்தாய்வு

மணம்பூண்டி மக்களுடன் எம்.எல்.ஏ., கலந்தாய்வு

ADDED : ஆக 17, 2011 03:41 AM


Google News

க்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி முருகேசன் வரவேற்றார். பி.டி.ஓ., முகமது ஷாஜகான், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெங்கடேசன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம், ரேஷன் கடை பொருட்களின் அளவு, சத்துணவு மையத்தில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் உணவு, முட்டை பற்றி கேட்டறிந்தார். குடிநீர் விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகள் பட்டியல் தயார் செய்தல் குறித்தும் பொதுமக்களுடன் எம்.எல்.ஏ., விவாதித்தார்.

ஊராட்சி ஊழியர்கள் அயூப்கான், ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார், ஊராட்சி உறுப்பினர்கள், உதவியாளர்கள், மக்கள்நலப் பணியாளர் மற்றும் பொதுமக்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண் டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us