Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/குடிநீர் பிரச்னை தீர்க்க பம்ப் அமைக்க கோரிக்கை

குடிநீர் பிரச்னை தீர்க்க பம்ப் அமைக்க கோரிக்கை

குடிநீர் பிரச்னை தீர்க்க பம்ப் அமைக்க கோரிக்கை

குடிநீர் பிரச்னை தீர்க்க பம்ப் அமைக்க கோரிக்கை

ADDED : செப் 20, 2011 12:55 AM


Google News

தர்மபுரி: தர்மபுரியை அடுத்த இண்டூர் பகுதி உள்ள கோவிலில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, அடி பம்ப் அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இண்டூர் மதுரை வீரன் கோவிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து ஸ்வாமியை வணங்கி செல்கின்றனர். இக்கோவிலில் திருவிழா நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் பொங்கல் வைத்து வழிபடுவர். பக்தர்களுக்கு கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, திருவிழா நாட்களில் பக்தர்கள் பாதுகாப்பற்ற குடிநீரை நீண்ட தூரம் சென்று வயல்வெளிகளில் எடுத்து வந்து பொங்கல் வைக்கின்றனர். கோவில் அருகே பல ஆண்டுக்கு முன் போடப்பட்ட அடி பம்பும் பழுதடைந்து நீர் இல்லாமல் உள்ளது. பக்தர்கள் வசதிக்காக கோவில் அருகே அடிபம்பு வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us