Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/எம்.குமாரசாமி கல்லூரியில் இணையதள வளர்ச்சி கருத்தரங்கம்

எம்.குமாரசாமி கல்லூரியில் இணையதள வளர்ச்சி கருத்தரங்கம்

எம்.குமாரசாமி கல்லூரியில் இணையதள வளர்ச்சி கருத்தரங்கம்

எம்.குமாரசாமி கல்லூரியில் இணையதள வளர்ச்சி கருத்தரங்கம்

ADDED : ஜூலை 24, 2011 01:14 AM


Google News

கரூர்: கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இணையதள வளர்ச்சி மற்றும் பயன்பாடு குறித்து கருத்தரங்கத்தில் ஐ.இ.இ.இ., பிரிவினால் நடத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினராக அறிவியல் எழுத்தாளர் மோகன் சுந்தரராஜன் பங்கேற்று, இணைய தளமும், உபயோகமும், இணையதள வளர்ச்சி பயன்பாடுகள், தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காணல், பிறரது அந்தரங்கங்களில் தலையிடுவதை சரியான முறையில் தடுத்தல், கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணைய தளங்கள், கணினி தோற்றம், வளர்ச்சி, புரட்சிகள், உலக ஆளுமையில் கணினியின் பங்கீடு குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்.



சில தீமைகள் இருந்தாலும்இø ணயதளத்தை முறையாக பயன்படுத்தி இனிமையான வாழ்வை பெற வேண்டும் என்றார்.கல்லூரி முதல்வர் வளவன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் சுந்தரராஜூ, மின்னணுவியல் மற்றும் தகவல் பொறியியல் துறைத்தலைவர் கவிதா ஆகியோர் பங்கேற்றனர். விழா, ஒருங்கிணைப்பாளராக மின்னியல் மற்றும் மின்னணுவியல் விரிவுரையாளர் கண்ணன் செயல்பட்டார். கருத்தரங்கில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us