Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரூ. 27 லட்சம் நகைகள் மீட்பு : 17 பேர் கைது

ரூ. 27 லட்சம் நகைகள் மீட்பு : 17 பேர் கைது

ரூ. 27 லட்சம் நகைகள் மீட்பு : 17 பேர் கைது

ரூ. 27 லட்சம் நகைகள் மீட்பு : 17 பேர் கைது

ADDED : ஆக 26, 2011 01:29 AM


Google News
Latest Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திருடு போன 27 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, வாகனங்கள் மீட்கப்பட்டன; 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்திரசேகரன் எஸ்.பி., கூறியது: தாண்டிக்குடி பகுதியில் சிவகாமியம்மன் சிலையை திருடிய பண்ணைக்காடு ஈஸ்வரன், பாண்டி, அழகேசன் கைது செய்யப்பட்டனர்; அம்மன் சிலை மீட்கப்பட்டது.

திண்டுக்கல் முனிசிபல் காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் இருந்து, ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் தங்க நகைகள் மீட்கப்பட்டன. பாரதிபுரம் ஜக்கிரியா நகரை சேர்ந்த மாதவனிடம் இருந்து 16 பவுன் நகை; ஆண்டிபட்டியை சேர்ந்த பாலாவிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் மீட்கப்பட்டன. மொத்தம் 18 லட்சம் மதிப்பில் 81 பவுன் நகை, வாகனங்கள் மீட்கப்பட்டன. கூடுதல் எஸ்.பி., ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், எஸ்.ஐ., ரமேஷ் கண்ணா தலைமையிலான குழுவினர் இவற்றை மீட்டனர், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us