/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திண்டுக்கலில் எரிவாயு தகன மேடைஇனி "மூக்கை பிடிக்க' வேண்டியதில்லைதிண்டுக்கலில் எரிவாயு தகன மேடைஇனி "மூக்கை பிடிக்க' வேண்டியதில்லை
திண்டுக்கலில் எரிவாயு தகன மேடைஇனி "மூக்கை பிடிக்க' வேண்டியதில்லை
திண்டுக்கலில் எரிவாயு தகன மேடைஇனி "மூக்கை பிடிக்க' வேண்டியதில்லை
திண்டுக்கலில் எரிவாயு தகன மேடைஇனி "மூக்கை பிடிக்க' வேண்டியதில்லை
ADDED : ஆக 05, 2011 10:52 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் நாகல்நகரில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகனமேடை பணி
முடிந்து, சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் பயன்பாட்டிற்கு
வர உள்ளது. திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் நகராட்சி மின்மயானம் உள்ளது.
இங்கு திண்டுக்கல், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் உடலை தகனம்
செய்கின்றனர். சுகாதார முறையில் செயல்படும் மின்மயானத்துடன், கூடுதலாக ஒரு
எரிவாயு தகன மேடை அமைக்க, நகராட்சியினர் முடிவு செய்தனர்.இதையடுத்து
ஒத்தக்கண் பாலம் அருகே ஒரு கோடி 15 லட்சம் செலவில் தகன மேடை அமைக்கும் பணி,
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. கட்டுமான பணிகளுக்கு பின்,
பாய்லர்கள் அமைக்கப்பட்டுள்ளது. விறகுகளை சிறு துண்டுகளாக வெட்டி எரித்து,
மீத்தேன் வாயுவை கொண்டு இறந்தவர்களின் உடலை எரிக்கும் முறையில் தகனமேடை
அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்தவுடன் செயல்பாடு குறித்து ஒத்திகை
பார்க்கப்பட்டது. உடலை எரிக்க தேவையான வெப்பநிலை கிடைக்கிறதா என, முதலில்
சோதிக்கப்பட்டது.
இதற்காக நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர் ஒருவர்
உதவியுடன், அப்பகுதியில் இறந்தவரின் உடலை கொண்டு சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் குறிப்பிட்ட வெப்பநிலையில் உடல் முழுமையாக எரிந்தது.
செயல்பாடு திருப்பதிகரமாக இருந்ததால் பயன்பாட்டிற்கு கொ ண்டு வர,
நகராட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
ஒரு உடலை எரிக்க 200 கிலோ விறகு தேவைப்படுகிறது. பராமரிப்பு பணியை,
நாகல்நகர் எரிவாயு தகனமேடை பராமரிப்பு குழு, என்ற அமைப்பிடம் ஒப்படைக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை இக்குழு நிர்ணயிக்கும். இம்மாத
இறுதிக்குள் தகன மேடை பயன்பாட்டிற்கு வரும்.