/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் மாவட்டத்தில் 31 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் வெற்றிகரூர் மாவட்டத்தில் 31 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் வெற்றி
கரூர் மாவட்டத்தில் 31 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் வெற்றி
கரூர் மாவட்டத்தில் 31 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் வெற்றி
கரூர் மாவட்டத்தில் 31 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் வெற்றி
ADDED : ஜூலை 26, 2011 12:51 AM
கரூர்: தமிழகத்தில் நடந்து முடிந்த வி.ஏ.ஓ., தேர்வில் கரூர் மாவட்டத்தில் 31 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 20ம் தேதி தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வி.ஏ.ஓ., பதவிக்கான எழுத்து தேர்வு நடந்தது. குறைந்தபட்ச கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.ஸி., என்பதால் காலியாக இருந்த சுமார் 3,400 பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதிலும் சுமார் 10 லட்சம் பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர். ஒன்பது லட்சம் பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அதில் சுமார் ஏழு லட்சம் பேர் வரை தேர்வு எழுதினர். கரூர் மாவட்டத்தில் 6,000 க்கு ம் மேற்பட்டவர்கள் வி.ஏ.ஓ., தேர்வு எழுதினர். கடந்த 19ம் தேதி இணையதளத்தில் வி.ஏ .ஓ., தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் கரூர் மாவட்டத்தில் 31 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடந்த போது, 'கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தது' என தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். ஆனால் தேர்வு எழுதியவர்களில் குறைந்தளவு பேரே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


