/உள்ளூர் செய்திகள்/சேலம்/10 ஆயிரம் பேர் பங்கேற்பு சேலத்தில் 3 நாட்கள் தியான, யோக பயிற்சி10 ஆயிரம் பேர் பங்கேற்பு சேலத்தில் 3 நாட்கள் தியான, யோக பயிற்சி
10 ஆயிரம் பேர் பங்கேற்பு சேலத்தில் 3 நாட்கள் தியான, யோக பயிற்சி
10 ஆயிரம் பேர் பங்கேற்பு சேலத்தில் 3 நாட்கள் தியான, யோக பயிற்சி
10 ஆயிரம் பேர் பங்கேற்பு சேலத்தில் 3 நாட்கள் தியான, யோக பயிற்சி
சேலம்: ''சேலத்தில் வரும், 30ம் தேதி முதல், 2ம் தேதி வரை, மூன்று நாள், ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கிவாசுதேவ் 'ஷாம்பவி மஹா முத்ரா' தியான, யோக பயிற்சி அளிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலத்தில் மூன்று நாட்களுக்கு நடக்கும் தியான, யோகா பயிற்சி முகாமில், 10 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், தற்காலிக கழிப்பறை, வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்க வசதியாக, 30 திருமண மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளது. அவர்கள் வந்து செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜக்கிவாசுதேவ், 'ஷாம்பவி மஹா முத்ரா' என்ற தியான, யோகா முறையை பக்தர்களுக்கு கற்று தர உள்ளார். ஒரே நாளில், 10 ஆயிரம் பக்தர்களுக்கு தீட்சை அளிக்கவுள்ளார்.
'ஷாம்பவி மஹா முத்ரா' பயிற்சியில் தியான கலை, யோக கலை இரண்டையும் கலந்து, பக்தர்களுக்கு கற்பிக்க உள்ளார். அரை மணி நேரம் 'சாம்பவி மஹா முத்ரா' யோகா, தியான பயிற்சியை செய்வதன் மூலம், பல்வேறு உடல் பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும். பள்ளி குழந்தைகள் ஞாபக சக்தி பெறுவதுடன், அலைபாயும் மனதை அடக்கி ஆளும் திறன் பெறுவர். 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் முதல், இந்த தியான, யோகா பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
சேலம் அரசு கலைக்கல்லூரியில், வரும், 30ம் தேதி மாலை, 6.30 மணி முதல் இரவு, 8.30 மணி வரை ஜக்கிவாசுதேவ் ஆன்மிக வகுப்பு எடுக்கிறார். 1 மற்றும், 2ம் தேதி காலை, 7.30 மணி முதல் மாலை, 6.30 மணி வரை ஜக்கிவாசுதேவ் அளிக்கும் தியான, யோக பயிற்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு, பயன் பெறலாம். மேலும் விபரம் அறிய, 890 350 2000, 890 350 3000 ஆகிய தொலைபேசி எண்ணில தொடர்பு கொள்ளலாம். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளவும் பெயரை பதிவு செய்யலாம்.