ADDED : ஜூலை 24, 2011 01:09 AM
தர்மபுரி: பென்னாகரம் அருகே குடிக்க பணம் தராததால், மனைவியின் கையை வெட்டிய கணவனை போலீஸார் கைது செய்தனர்.
பென்னாகரம் அடுத்த ராஜாவூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மேச்சேரி (58). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவரது மனைவி சின்னத்தாய் (55) கூலி வேலைக்கு சென்று சம்பாதித்த வருவாயில் அடிக்கடி மேச்சேரிக்கு குடிக்க பணம் தந்துள்ளார். நேற்று முன்தினம் மது குடிக்க பணம் தருமாறு சின்னத்தாயிடம் மேச்சேரி கேட்டுள்ளார். சின்னத்தாய் பணம் தராததால், ஆத்திரமடைந்த மேச்சேரி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சின்னத்தாயின் கையை வெட்டினார். இதில், சின்னத்தாயின் கை துண்டானது. பென்னாகரம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்ற சின்னத்தாய் மேல்சிகிச்சைக்காகய சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பென்னாகரம் போலீஸார் விசாரித்து, மேச்சேரியை கைது செய்தனர்.


