/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பொதுமக்களை ஏமாற்றி வீட்டுமனை விற்றால் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைபொதுமக்களை ஏமாற்றி வீட்டுமனை விற்றால் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை
பொதுமக்களை ஏமாற்றி வீட்டுமனை விற்றால் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை
பொதுமக்களை ஏமாற்றி வீட்டுமனை விற்றால் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை
பொதுமக்களை ஏமாற்றி வீட்டுமனை விற்றால் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை
தூத்துக்குடி : பொதுமக்களை ஏமாற்றி வீட்டுமனை விற்பனை செய்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆஷிஷ்குமார் எச்சரித்துள்ளார்.
மேலும், வீட்டுமனைகள் வாங்கும்போது நகர்ப்புற ஊரமைப்புத்துறை அனுமதியும், பஞ்சாயத்தின் முறையான அனுமதியும் பெறப்பட்ட வீட்டுமனைப்பிரிவு இடங்களில் உள்ள வீட்டுமனையா? பஞ்சாயத்து பொதுக்காரியங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் எதுவும் உள்ளனவா? என்பது போன்ற விபரங்களை சரிபார்த்து அதன் பின்னர் வீட்டுமனைகளை பொதுமக்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பொதுக்காரியங்களுக்காக ஒதுக்கபடும் 10 சதவீத இடத்தினையும், பாதைக்காக ஒதுக்கீடு செய்யும் இடத்தினையும் பஞ்சாயத்திற்கு தானமாக எழுதிக் கொடுக்காமல் அதனையும் சில பஞ்சாயத்து தலைவர்களின் உதவியோடு பொதுமக்களை ஏமாற்றி சில நில உடமையாளர்கள் விற்பனை செய்து விடுவதால் பொதுமக்கள் வீட்டுமனை வாங்கும் போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும் உரிய மனைப்பிரிவு அனுமதி பெறாமல் வீட்டுமனை விற்பனை செய்பவர்கள் மீதும், பொது இடங்களை விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டப்படியான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.