Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் : எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி கருத்து

குழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் : எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி கருத்து

குழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் : எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி கருத்து

குழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் : எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி கருத்து

ADDED : செப் 28, 2011 12:38 AM


Google News

குற்றாலம் : குழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி கூறினார்.

புதிய தமிழம் கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி தென்காசி, செங்கோட்டை, கீழப்பாவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுற்று பயணம் செய்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் குற்றாலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:'உள்ளாட்சி தேர்தலில் கள ஆய்வு செய்து புதிய தமிழகம் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக நான் நேரில் வந்துள்ளேன். அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, சாத்தூர், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, கீழப்பாவூர், சுரண்டை, ஆலங்குளம், கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளை., மானூர், நெல்லை, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டேன்.



உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்களின் ஆர்வம் மிகுதியாக இருக்கிறது. தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை கேலி கூத்தாக்கி விட்டது. தேர்தலுக்கு முன்னரே திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல், உள்ளாட்சி அமைப்புகளில் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீடு விபரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் இதுபற்றிய செய்தி வெளியிடப்படவில்லை. இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. குழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.



அ.தி.மு.க., தி.மு.க., இரண்டு கட்சிகளுமே கூட்டணி கட்சிகளை உதாசீனப்படுத்தி விட்டன. இது ஜனநாயக நம்பிக்கை துரோகம். பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளை அழிக்க பார்க்கின்றன. ஆனால் பெரிய கட்சிகள்தான் அழியுமே தவிர சிறிய கட்சிகள் அல்ல. இத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் பலத்தை நிருபிக்க நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. புதிய தமிழகம் வேட்பாளர்கள் இன்று (28ம் தேதி) அறிவிக்கப்படுவார்கள். அவர்கள் நாளை (29ம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்வர். உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரசியலில் மிக பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும்.



தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். சாதி, மத, மொழி பாகுபாடின்றி சமூக தொண்டு செய்பவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவோம். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். நேர்மையான நிர்வாகம் நடக்க வேண்டும். மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும். நில மோசடியில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நிதி அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பல விசித்திரங்கள் ஏற்படும்.



தி.மு.க.செல்லும் வழிக்கு எதிர் வழியில்தான் எப்போதும் அ.தி.மு.க. செல்லும். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.செல்லும் பாதையிலேயே அ.தி.மு.க.வும் செல்கிறது'' என்றார் எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us