கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
ADDED : செப் 20, 2011 12:55 AM
அரூர்: கடத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி மாயமனது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளி தெய்வம். இவரது மகள் நிவேதா (17). இவர் சேலத்தில் தங்கியிருந்து தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி வீட்டிற்கு வந்த நிவேதா கல்லூரி கட்டணம் செலுத்த பணம் வாங்கிக்கொண்டு சேலம் சென்றுள்ளார். அடுத்தநாள், நிவேதாவின் பெற்றோர் கல்லூரியை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது நிவேதா கல்லூரிக்கு செல்வில்லை என தெரியவந்தது. இதனையடுத்து, நிவேதாவை உறவினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட இடங்களில் தேடிப்பார்த்தனர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நிவேதாவின் தந்தை கடத்தூர் போலீஸில் அளித்த புகாரில், தனது மகளை நவலை கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபரும் அவரது உறவினர்களான வெள்ளையம்மாள், சாக்கன், வினோத், முனிராஜ், சின்னதம்பி, மாரி உள்ளிட்ட 7 பேர் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து கடத்தூர் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடிவருகின்றனர்.


