ADDED : அக் 03, 2011 11:01 PM
தேனி : தேனி மாவட்டத்தில் பிரசாரத்திற்கு ஜீப்களை பயன்படுத்ததால், கேரள ஜீப் டிரைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் எது நடந்தாலும் கேரள ஜீப்களை பிரசாரத்திற்கு புக் செய்வது வழக்கம். கடந்த முறை சட்டசபை தேர்தலில் தேர்தல் கமிஷன் கெடுபிடி காரணமாக கேரள ஜீப்கள் பயன்படுத்தப்படவில்லை. இம்முறை உள்ளாட்சி தேர்தலிலும் கேரள ஜீப்களை வேட்பாளர்கள் யாரும் பயன்படுத்தவில்லை. இதனால் கேரள ஜீப் டிரைவர்கள் இம்முறையும் ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர்.


