/உள்ளூர் செய்திகள்/தேனி/அனைவருக்கும் பாகுபாடின்றி வளர்ச்சிப் பணிகள் : அணைப்பட்டி தலைவர் வேட்பாளர் சதாசிவம்அனைவருக்கும் பாகுபாடின்றி வளர்ச்சிப் பணிகள் : அணைப்பட்டி தலைவர் வேட்பாளர் சதாசிவம்
அனைவருக்கும் பாகுபாடின்றி வளர்ச்சிப் பணிகள் : அணைப்பட்டி தலைவர் வேட்பாளர் சதாசிவம்
அனைவருக்கும் பாகுபாடின்றி வளர்ச்சிப் பணிகள் : அணைப்பட்டி தலைவர் வேட்பாளர் சதாசிவம்
அனைவருக்கும் பாகுபாடின்றி வளர்ச்சிப் பணிகள் : அணைப்பட்டி தலைவர் வேட்பாளர் சதாசிவம்
உத்தமபாளையம் : உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் அணைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு ஆர்.என்.சதாசிவம் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
சுகாதாரம் காக்க புதிய குப்பை கிடங்கு ஏற்படுத்தப்பட்டு ஊரின் குப்பைகள் அனைத்தும் அங்கு மக்கும், மக்கா குப்பைகளாக சேகரிக்கப்படும். இதன் மூலம் ஊரில் தினமும் இருமுறை குப்பைகளும், சாக்கடைகளும் அள்ளப்பட்டு பசுமை கிராமமாக்கப்படும். தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள சாக்கடைகள் பராமரிப்பு செய்யப்படும். வடக்கு ஆதிதிராவிடர் காலனியில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் தேங்கியுள்ள பிரச்னைக்கு தீர்வாக அப்பகுதியில் கழிவுநீர் வடிகால் பாதை நீட்டிக்கப்படும். தற்போதுள்ள தெருவிளக்குகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு ஊர் முழுவதும் சோலார் விளக்குகள் மாட்டப்படும். சமத்துவ மயான சாலை பராமரிப்பு செய்யப்பட்டும். ஊர் முழுவதும் சி.சி.ரோடுகள் பராமரிக்கப்பட்டு புதிய இடங்களில் அமைக்கப்படும். சண்முகாநதி பகுதியில் பன்றிகளின் தொல்லையை ஒழிக்க நிரந்தர தீர்வு காணப்படும். என்றார்(93450-90094)


